வெணதுகினம்

வியாழன், 31 ஜூலை, 2025

கலையோடு நான்..


 கலையோடு நான்..

------------------


நான் கதைகளோடு வளர்ந்தவள். என் தாயாரின் வயிற்றில் நான்  கருவாக இருக்கையிலேயே கதைக் கேட்க தொடங்கியிருக்கலாம். என் தந்தையார் அற்புதமான கதை சொல்லி. கதை சொல்லும் போது கதையின் போக்கில் பாவங்களை முகத்தில் கூட்டிக் கதை சொல்வார். என் தாயாரின் மடியில் நான் அமர்ந்ததாக எந்த நினைவு இல்லை. ஆனால் தந்தையின் மடியில் அமர்ந்து கதை கேட்ட ஞாபகங்கள் இன்னும் மனதில் பசுமையாக! கதை கேட்கும்போது அதிக கேள்விகள் கேட்பேன், கதை முடிந்தப்பின்னும் நிறையக் கேட்பேன். என் தந்தையாருக்கு அது மிகவும் பிடிக்கும். அதன் தொடர்பில் இன்னொரு கதை சொல்வார்.
அந்தக் கதை சொல்லும்  கலை என்னுடனே வளர்ந்து. கலை இலக்கியத்தில் நான் நல்ல கதை சொல்லியா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் நான் காணும் சின்னச் சின்ன நிகழ்வுகள், கேட்கும் விடயங்கள் பிறரிடம் சொல்லும் போது கதையாகவே மாறிவிடுகிறது. இப்படியாக எண்ணற்ற கதைகள் என்னுள்ளே  உரையாடி ,உறவாடி என்னையறியாது என்னுடன் அவை உறைந்து இருக்கின்றன. என் புன்னகை, கண்ணீர் ,  வலி... வேதனை அனைத்தும் எனக்கு கதைகளே...

வாணிஜெயம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக